விருதுநகர், ஏப். 20: ராஜபாளையம் சுந்தரநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் அருள்ராஜ் (40). இவர், நேற்று பூச்சிமருந்து குடித்து விட்டு விருதுநகர் எஸ்பி அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்துள்ளார். அங்கிருந்த போலீசார், அவரை விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், அருள்ராஜ் திருவில்லிபுத்தூரில் உள்ள பால்கோ கடை ஒன்றில் கடந்த மாதம் பால்கோவா வாங்கி சாப்பிட்டுள்ளார். அதில் பல்லி இருந்ததாக கூறி வாந்தி எடுத்து பிரச்னை செய்துள்ளார்.