ஆண்டிபட்டி, ஏப். 20: ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தைச் சேர்ந்த சடையாண்டி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் துரைராஜ் கோரிக்கை விளக்க உரையாற்றினார். இதில், ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், வனத்துறை காவலர்கள் மற்றும் ஊராட்சி எழுத்தாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்த பட்ச ஓய்வு ஊதியம் ரூ.7,850 வழங்க வேண்டும்.