திண்டுக்கல், ஏப். 19: திண்டுக்கல் கிழக்கு ராமநாதபுரத்தை சேர்ந்தவர் துரைச்சிங்கம் (63). இவரது மகன் கண்ணன் (29). அதே பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் வீரபாண்டி (20). இவரது தங்கை பாவனாவுக்கும், கண்ணனுக்கும் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாட்டால் தம்பதி பிரிந்து வாழ்கின்றனர். இதனால், அதிருப்தி அடைந்த வீரபாண்டி, மைத்துனர் கண்ணனை கண்டித்தார். இந்நிலையில், கடந்த 06.06.2020ல் மருதாணிக்குளத்தில் சமரசம் பேசியபோது வீரபாண்டிக்கும், கண்ணனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, துரைசிங்கம் வீரபாண்டியை பிடித்துக் கொள்ள, அவரை கண்ணன் அரிவாளால் வெட்டினார்.