செல்லாண்டியம்மன் கோயிலில் பொங்கல் விழாவையொட்டி மாவிளக்கு ஊர்வலம்

அவிநாசி, ஏப். 14: அவிநாசி கங்கவர் தெருவில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் பொங்கல் சாட்டுவிழா நேற்று முன்தினம் துவங்கியது. அவிநாசி லிங்கேசுவரர் கோயிலில் இருந்து நேற்று அதிகாலை சக்தி அழைத்தல், படைக்கலம் எடுத்தல் நடைபெற்றது. விழாவில், அம்மனுக்கு பெண்கள், மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்து பொங்கல் வைத்து வழிபட்டனர். விழாவில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றது. நேற்று மாலை 6 மணிக்கு ஆற்றில் கும்பம் விடுதல் நடைபெற்றது. இன்று மஞ்சல் நீராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Related Stories: