திருவெறும்பூர், ஏப்.2: திருவெறும்பூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்துவரும் மாணவன் திடீரென மாயமானார்.
தூத்துக்குடி மாவட்டம், வேம்பர் பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன்-முருகேஸ்வரி தம்பதி மகன் பிரேம்குமார். இந்நிலையில் தம்பதியர் திருப்பூரில் தங்கி வேலை பார்த்தபோது திருவெறும்பூர் செல்வபுரத்தை சேர்ந்த தமிழரசி என்பவரும் அங்கு வேலை பார்த்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயசீலன்-முருகேஸ்வரி பிழைப்புக்காக ஈரோடு சென்றுள்ளனர். அப்போது பிரேம்குமாரை தமிழரசியுடன் அனுப்பியதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தமிழரசி, பிரேம்குமாரை தனது வீட்டில் வைத்து வளர்த்து வந்ததோடு திருவெறும்பூரில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் படிக்க படிக்க வைத்துள்ளார்.