நத்தம், மார்ச் 31: நத்தம் பேரூராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு அரசு சார்பில் சீருடை வழங்கும் விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா தலைமை வகிக்க, செயல் அலுவலர் சரவணக்குமார் முன்னிலை வகித்தார். விழாவில் 25 தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.