ஏரல், மார்ச் 30: சாயர்
புரம் கூட்டுறவு வங்கியில், பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்று மற்றும் நகைகளை ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ வழங்கினார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பொது நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகை வழங்கும் நிகழ்ச்சி, சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்தது. வங்கி தலைவர் அறவாழி தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் பாக்கியலெட்சுமி அறவாழி, கூட்டுறவு சங்க துணை பதிவாளர் ரவிந்தீரன், வங்கி செயலர் சகுந்தலாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ கலந்து கொண்டு சாயர்புரம் கூட்டுறவு கடன் சங்கத்தில் 48 பேருக்கு ரூ.15.80 லட்சம் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ் மற்றும் நகையை வழங்கி பேசினார்.