கொரோனாவால் உயிரிழந்த எஸ்எஸ்ஐ குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் அரசு நிவாரணம்

நெல்லை, மார்ச்26: கொரோனா ஊரடங்கு காலத்தில் பணியின் போது தொற்று பாதித்து உயிரிழந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சத்துக்கான காசோலையை மாநகர போலீஸ் கமிஷனர் துரைகுமார் வழங்கினார். கடந்த  ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தது. இதையொட்டி மாநகர  போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் கண்காணிப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதில் பணியிலிருந்த சந்திப்பு போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜான்சன் கொரோனா பாதிப்பால் இறந்தார்.

இதையடுத்து தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி ரூ.25 லட்சத்திற்கான காசோலையை அவரது மனைவி மற்றும் குழந்தைகளிடம் மாநகர போலீஸ் கமிஷனர் துரைக்குமார் வழங்கினார். இதுபோல் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த ஊர்க்காவல் படைவீரர்  முருகன் குடும்பத்திற்கு ரூ.15  ஆயிரம் குடும்ப நலத்தொகைக்கான காசோலையை நெல்லை மாநகர கிழக்கு மண்டல போலீஸ்  துணை கமிஷனர் சுரேஷ்குமார், முருகனின் மனைவியிடம் வழங்கினார்.

Related Stories: