நெல்லை, மார்ச்26: கொரோனா ஊரடங்கு காலத்தில் பணியின் போது தொற்று பாதித்து உயிரிழந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சத்துக்கான காசோலையை மாநகர போலீஸ் கமிஷனர் துரைகுமார் வழங்கினார். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தது. இதையொட்டி மாநகர போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதில் பணியிலிருந்த சந்திப்பு போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜான்சன் கொரோனா பாதிப்பால் இறந்தார்.