ஊட்டி, மார்ச் 22: ஊட்டி மாரியம்மன் கோயில் திருவிழா துவங்கிய நிலையில், நேற்று ஆதிபராசக்தி அலங்காரத்தில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்தார். ஊட்டியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் ஒரு மாதகாலம் கொண்டாடப்படும். நாள்தோறும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் வீதி உலா வருவது வழக்கம். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சமுதாயத்தின் சார்பில் இந்த வீதி உலா நடத்தப்படும். இந்நிலையில் கடந்த 19ம் தேதி பூச்சொறிதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முதல் வீதி உலா துவங்கியது.