அருப்புக்கோட்டை, மார்ச் 5: அருப்புக்கோட்டை நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட 21வது வார்டு கவுன்சிலர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையாளருமான பாஸ்கரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து வேறு யாரும் மனு தாக்கல் செய்யாத நிலையில் சுந்தரலட்சுமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பாஸ்கரன் அறிவித்தார். சுந்தரலட்சுமி ஏற்கனவே நகர்மன்ற தலைவராக 2 முறை இருந்த சிவப்பிரகாசம் என்பரது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.