காதலிக்கும்படி சிறுமியிடம் டார்ச்சர் போக்சோவில் வாலிபர் கைது

கும்பகோணம், மார்ச்4: பாபநாசம் அருகே நெடுந்தெரு அம்பலகார தெருவில் வசித்து வருபவர் முத்து (22). இவர் அதே தெருவை சேர்ந்த 16 வயது சிறுமியிடம், தன்னை காதலிக்க வேண்டுமென அடிக்கடி வற்புறுத்தி உள்ளார். மேலும் உன்னையே திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி உள்ளார். இதனால் மனமுடைந்த அந்த சிறுமி பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பகவதி சரணம், சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி, ஏட்டுகள் அஜந்தா, லெட்சுமி ஆகியோர் முத்து மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விரணை நடத்தி அவரை கைது செய்தனர்.

Related Stories: