அரவக்குறிச்சி. பிப்.24: அரவக்குறிச்சி ஒன்றியத்தில் கொடையூர், நாகம்பள்ளி,வெஞ்சமாங்கூடலூர், புங்கம்பாடி, ஈசநத்தம், அம்மாபட்டி, எருமார்பட்டி, சாந்தப்பாடி, கோவிலூர் உள்ளிட்ட 20ஊராட்சிகளும், அரவக்குறிச்சி பேரூராட்சி, பள்ளபட்டி நகராட்சி ஆகியவை உள்ளது. வெயிலின் தாக்கத்தினால் பல நாட்களாக கடும் வெப்பம் நிலவி வறட்சியின் காரணமாக ஆழ்துளை கிணறுகள் மற்றும் விவசாய கிணறுகள் அனைத்தும் வற்றி விட்டன. இதனால் வீடுகளில் உள்ள ஆழ்குழாய் நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு போய் விட்டது. குறைந்த அளவே வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. அதுவும் போதுமான அளவு இல்லாத நிலை இருந்தது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு திண்டாடினர்.
பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் 20 முதல் 30 நாட்களுக்கு ஒரு தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் தண்ணீருக்கு தவித்து வந்தனர். பொதுமக்கள் குடிநீர் விலைக்கு வாங்கி குடிக்க வேண்டிய அவலமான நிலை ஏற்பட்டது.