குடியாத்தம், பிப்.15: குடியாத்தம் அருகே ஒற்றை யானை அட்டகாசம் செய்ததால் வனத்துறையினர் காட்டிற்குள் விரட்டியடித்தனர்.குடியாத்தம் வனச்சரகம் தமிழக, ஆந்திர, கர்நாடக மாநிலங்களை இணைக்கும் மிகப்பெரிய வனச்சரகமாக உள்ளது. இங்கு யானை, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்டவை உள்ளது. மேலும் ஆந்திர வனச்சரகத்தில் யானைகள் சரணாலயம் உள்ளதால், அங்கு உள்ள யானைகள் தமிழக வனப்பகுதியான குடியாத்தம் வனச்சரகத்தில் அவ்வப்போது நுழைந்துவிடுகிறது. அப்போது தமிழக யானைகளுடன் சண்டையிடும், ஆந்திர யானைகள் வழி தவறி குடியாத்தம மலை கிராமம் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்துவிடுகிறது.