மதுரை, பிப்.11: மதுரையில் அமைப்பின் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. முடிவில் அமைப்பு நிர்வாகியும், அரபிக்கல்லூரி முதல்வருமான முஸ்தபா கமால்தீன் கூறியதாவது: தேர்தலை முன்வைத்து மக்கள் மத்தியில் இன வேறுபாட்டை உருவாக்கும் வகையில் உத்ரகண்ட் மாநிலம் ஹரித்துவார் கூட்டத்தில் இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்வதாக அறிவிக்கப்பட்டதற்கு ஆல்-இந்திய இமாம் கவுன்சில் கண்டனம் தெரிவிக்கிறது. கர்நாடகாவில் நடைபெறும் ஹிஜாபிற்கு எதிரான போராட்டத்தையும் கவலையோடு கவனிக்கிறோம். பெண்களுக்கு சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை இஸ்லாம் வழங்கியுள்ளது.