பள்ளிகொண்டா,பிப்.9:
பள்ளிகொண்டாவில் ரதசப்தமியையொட்டி, 5 வாகனங்களில் ரங்கநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ரத சப்தமி. இதனை தை மாத அமாவாசையில் இருந்து வளர்பிறையில் வரும் 7வது நாளில் சூரிய பகவான் அமைந்துள்ள கோயில்கள், பெருமாள் கோயில்களில் 7 வாகனங்களில் சுவாமி எழுந்தருளி புறப்பாடு நடைபெறுவது வழக்கம்.அதன்படி, பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயிலில் உள்ள தாயார் சன்னதி முன்பு நேற்று காலை 7 மணிக்கு சூரியபிரபை வாகனம், 9 மணிக்கு அனுமந்த வாகனம், 11 மணிக்கு சேஷ வாகனம், 3 மணிக்கு கருட வாகனம், நிறைவாக மாலை 6 மணிக்கு சந்திரபிரபை வாகனத்தில் ரங்கநாத பெருமாள் எழுந்தருளினார்.