காரைக்குடி: காரைக்குடி அருகே பள்ளத்தூரில் மாற்று கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு பெற்றுள்ளார். காரைக்குடி அருகே பள்ளத்தூர் முதல்நிலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் ருக்மணி வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக திமுக நிர்வாகி செல்லம்மை வேட்புமனு தாக்கல் செய்தார். மாற்றுகட்சியினர் யாரும் இந்த வார்டில் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வேட்புமனு வாபஸ் பெறும் நாளான நேற்று மாற்று வேட்பாளர் செல்லம்மை தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.