கும்பாபிஷேக விழா

இளையான்குடி: இளையான்குடி அருகே மாடக்கோட்டை முனீஸ்வரர் கோயிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த பிப்ரவரி 4ம் தேதி முதல் கால யாக பூஜையுடன், விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, விக்கிரக வழிபாடு, கணபதி ஹோமம் ஆகியவை நடைபெற்று, சிவாச்சாரியார்கள் புனித நீரை கோபுர விமானங்களுக்கு எடுத்துச் சென்றனர். அதன்பின் நேற்று காலை 11 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதற்கு பிறகு மூலவர் முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மதியம் பன்னிரண்டு மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. மாடக்கோட்டை, சாத்தமங்கலம், வண்டல், மரைக்கான்குடியிருப்பு, முத்தூர், வரவனி கிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர்.

Related Stories: