மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சின்னமனூர், பிப். 5: சின்னமனூர் மார்க்கையன்கோட்டை ரவுண்டானா பிரிவில், நீட் விலக்கு மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மாணவர் சங்க தேனி மாவட்ட குழு சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மாவட்டச் செயலாளர் வேல்பிரகாஷ், சண்முகசுந்தரம் மற்றும் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், ‘ஒன்றிய அரசைக் கண்டித்தும், நீட் விலக்கு மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷமிட்டனர்.

Related Stories: