ஆழியார் பூங்கா மீண்டும் திறப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஆனைமலை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் பூங்கா கொரோனா காரணமாக கடந்த 4 வாரங்களுக்கு முன்பு மூடப்பட்டு இருந்தது. நோய் தொற்று குறைந்து வருவதால், பூங்காவை திறக்க அனுமதி அரசு அளித்தது. இதையடுத்து, நேற்று முதல் ஆழியார் அணை பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது. பூங்கா திறக்கப்பட்டதால் பல்வேறு பகுதியிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியோடு பூங்காவிற்குள் சென்று இயற்கை அழகை கண்டு ரசித்தனர். சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால், பூங்காவிற்குள் முகக்கவசம் அணிவது, நோய் கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: