பெரம்பலூர், ஜன.29: பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழி பயிலரங்கம் 27, 28 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறுகிறது. இப்பயிலரங்கத்தில் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (27ம் தேதி) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி கலந்து கொண்டு பயிலரங்கத்தை துவக்கி வைத்து பேசியதாவது: தமிழ்மொழி தொன்மையான மூத்த மொழியாகும். தமிழக அரசின் ஆட்சி மொழியான தமிழ்மொழியில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழி பயிலரங்கம் நடத்தப்படுகிறது.