செந்துறை,ஜன.29: செந்துறை அருகே வடக்குபரணம் கிராமத்தில் உள்ள மாரியம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிப்பட்டனர். அரியலூர் மாவட்டம் பரணம் கிராமத்தின் ஒரு பகுதியான வடக்கு பரணத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். பால்குட திருவிழாவை முன்னிட்டு பெரியேரி கரையில் பூசாரி தர்மலிங்கம் தலைமையில் சக்தி வழிபாடு நடத்தி பக்தர்கள் காப்பு கட்டி ஏரியில் நீராடினர்.