ஆண்டிபட்டி, ஜன. 29: ஆண்டிபட்டி அருகே, வரதராஜபுரம் கிராமத்தில் உள்ள கண்மாயில் நேற்று வாடிவாசல் அமைத்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதாக ராஜதானி போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு சென்று ஜல்லிக்கட்டு போட்டியை தடுத்து நிறுத்தினர். அப்போது ராம்குமார் என்ற மாற்றுத்திறனாளி இளைஞரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசாரை கண்டித்து ஜல்லிக்கட்டு பயிற்சிக்கு வந்திருந்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டிபட்டி டிஎஸ்பி தங்ககிருஷ்ணன் நேரில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக்கூடாது என்றார்.