கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கோவை: கோவை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழக தலைமை பணிமனை முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்க பொது செயலாளர் வேளாங்கண்ணி ராஜ், மண்டல செயலாளர் கோபால், தவுலத்கான் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊதிய ஒப்பந்தத்தை முறையாக நடைமுறைப்படுத்தவேண்டும். அகவிலைப்படி உயர்வை வழங்கவேண்டும். போக்குவரத்து கழகத்தில் கடந்த 10 ஆண்டிற்கு மேலாக தொடரும் பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிடவேண்டும். மலைவாழ் படி வழங்கவேண்டும். ஓய்வு பெற்ற ெதாழிலாளர்களுக்கான பணப்பயன்களை உடனடியாக வழங்கவேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Related Stories: