தஞ்சை, ஜன.22: தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள வணிக வளாகங்கள், ஓட்டல்கள் உட்பட கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தாவிட்டால் அனுமதி ரத்து செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட இடங்களில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தஞ்சை மாநகரில் புதிதாக கட்டிடம் கட்டுபவர்கள் மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற்று தான் கட்ட வேண்டும். புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான அளவில் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு பொது கட்டிடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என்பது கட்டாயம். அந்த வகையில் ஆண்டுதோறும் கட்டிட உரிமத்தை தாசில்தாரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.