அனுமதியின்றி மதுவிற்ற 4 பேர் கைது

முத்துப்பேட்டை, ஜன.21: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் பல்வேறு பகுதியில் அனுமதியின்றி அரசு மதுபானம் வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை நடைபெற்று வருவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.இதனையடுத்து போலீசார் பல்வேறு பகுதியில் நடத்திய அதிரடி சோதனையில் தில்லைவிளாகம் செங்காங்காடு கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் ராமையன் (40) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் தில்லைவிளாகம் கிராமத்தில் வடிவேல் மகன் சந்திரமோகன் (35) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 10 மது பாட்டில்களையும், முத்துப்பேட்டை ரஹ்மத் நகரை சேர்ந்த மைதீன்பிச்சை மகன் சேக்தாவூது (40) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 16 மது பாட்டில்களையும், மேலும் முத்துப்பேட்டை பெரியகடை தெருவை சேர்ந்த பெரியமீரான் மகன் அப்துல்மாலிக் (40) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.மொத்தம் 51 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: