கூடுவாஞ்சேரி: தமிழ்நாடு காவல்துறை சார்பில், மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கூடுவாஞ்சேரி அருகே ஒத்திவாக்கம் கிராமத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் கடந்த 5ம் தேதி தொடங்கியது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்று மற்றும் பதக்கம் வழங்கும் விழா நேற்று நடந்தது. கூடுதல் டிஜிபி ஏ.அமல்ராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அதிதீவிர படைப்பள்ளி எஸ்பிக்கள் கே.பி.எஸ்.ஜெயச்சந்திரன், என்.டி.ரமேஷ், ஐஎஸ்எஸ்எப் நீதிபதி ஆர்.இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்துகொண்டு, துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற 250 பேருக்கு பாராட்டு சான்று மற்றும் பதக்கம் வழங்கினார்.