மயிலாடுதுறை ஜன.7: மயிலாடுதுறையில் வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்ற முதியவரின் கவனத்தை திசைதிருப்பி ரூ.1.40 லட்சத்தை திருடிச் சென்ற ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நபரை மயிலாடுதுறை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாருதி நகரை சேர்ந்தவர் கண்ணப்பன்(75). இவர் கடந்த மாதம் 28ம் தேதி வங்கியொன்றில் ரூ.1.40 லட்சம் பணம் எடுத்துக்கொண்டு வீடு திரும்பும்போது, பின்தொடர்ந்த மர்ம நபர்கள் அவரது கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்து, கண்ணப்பன் மயிலாடுதுறை போலீசில் அளித்த புகாரின்பேரில், எஸ்ஐ இளையராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு தேடிவந்தனர்.