அங்கன்வாடி கட்டிடம் திறப்பு

அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி காந்தி நகரில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் 10 லட்சம் மதிப்பீட்டில் காமராஜர் துறைமுக நிறுவனத்தினால் வழங்கப்பட்ட சமூகத்தின் மீதான பொறுப்பு நிதியில்  கட்டப்பட்டது. இதற்கான திறப்புவிழா நடந்தது. கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சூர்யகுமாரி முன்னிலை வகித்தார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் காஜாமைதீன் பந்தேநவாஷ் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பத்மாவதி, மேற்பார்வையாளர்கள் சுதந்திரம், லெட்சுமிதாய், முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம், ஊராட்சி தலைவர் நாகஜோதி, ஒன்றிய செயலாளர் பாலகணேஷ், பொன்ராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகுராமானுஜம், திமுக பிரமுகர் காந்திநகர் சீனிவாசபெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: