சிவகங்கை: சிவகங்கையில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. இந்நிகழ்ச்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர் தலைமையில் நடந்தது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சைமன்ஜார்ஜ் முன்னிலை வகித்தார். ஆணையாளர் உமாமகேஸ்வரி வரவேற்றார். சிவகங்கை வட்டாரத்தில் வரும் காலங்களில் குழந்தைகள் சார்ந்த பிரச்னைகளை தவிர்க்கும் வகையில் குழந்தைகள் சார்ந்த அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்குவது, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருமண பத்திரிக்கையில் திருமண வயதை பதிவு செய்வது, திருமணத்திற்கு அடிக்கப்படும் விளம்பர பதாகையில் பெண்களின் திருமண வயது 18 என்பதை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.