ஊட்டி: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தொற்று கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் பரவத்துவங்கியது. இதைக்கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. நீலகிரி மாவட்டத்திலும் கொரோனா தொற்று வேகம் எடுக்கவே, இதனை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. அனைத்து மக்களும் சமூக இடைவெளியை கடை பிடிக்கவும், கை கழுவுதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தன. மேலும், பொது இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளையும் மேற்கொண்டனர்.