சின்னமனூர் அருகே அங்கன்வாடி மையத்தில் தாய்மை பாரத இயக்க குழு ஆய்வு

சின்னமனூர், ஜன. 3: சின்னமனூர் அருகே, அப்பிபட்டி என்ற அழகாபுரி விசுவநாதபுரத்தில் அங்கன்வாடி உள்ளது. இங்கு 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு அனீஸ் பாத்திமா என்ற பணியாளர் அங்கன்வாடியை கவனித்து வருகிறார். இந்நிலையில், நேற்று சபாபதி தலைமையில், மத்திய தூய்மை பாரத இயக்கம் குழுவிவினர் அங்கன்வாடியில் ஆய்வு செய்தார். அப்போது அங்கன்வாடி வகுப்பின் தூய்மை, சமூக இடைவெளியுடன் குழந்தைகள் மாஸ்க் அணிந்து படித்தல் ஆகியவற்றை கேட்டறிந்தனர். மேலும், குழந்தைகள் பயன்படுத்தும் கழிப்பறை தூய்மையாக இருந்ததை பார்த்து, அனிஸ் பாத்திமாவை பாராட்டினர். இதில், அப்பிபட்டி கிராம ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியராஜன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: