சிவகாசி, ஜன. 1: வெம்பக்கோட்டை ஒன்றியம் உப்புபட்டியில் தரை பாலம் உள்ளது. புளிப்பாறைபட்டி, கிளியம்பட்டி, மம்சாபுரம், காக்கிவாடன் பட்டி பகுதி கிராமங்களில் பெய்யும் மழைநீர் வைப்பாற்று ஓடை வழியாக உப்புபட்டியை கடந்து வெம்பக்கோட்டை அணை பகுதிக்கு செல்கிறது. மழைக்காலங்களில் இந்த ஓடையில் 6 அடி வரை வெள்ள நீர் கரைபுரண்டு ஓடும். கடந்த மாதம் பெய்த மழையால் உப்புபட்டி ஓடையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் இப்பகுதியில் 4 நாட்கள் பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வெம்பக்கோட்டை, புளிப்பாறை பட்டி மாற்று பாதை வழியாக வாகனங்கள் சென்று வந்தன. உப்புபட்டி ஓடை ஆலங்குளம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.