நாகர்கோவில், டிச.31: குமரி மாவட்டத்தில் சுங்கான்கடை பகுதியில் உள்ள மலையில் அடிக்கடி தீ பிடித்து எரிவது வழக்கம். நேற்று முன்தினம் இரவும் இதனை போன்று தீ பிடித்து எரிந்தது. அந்த பகுதியில் உள்ள புல் புதர்கள், மரங்கள் எரிந்து சாம்பலாகின. தீ பிடித்து எரிவது தொடர்பாக நாகர்கோவிலில் தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மலையடிவாரத்தில் குடியிருப்பு பகுதிகளில் தீ வராமல் தடுக்கும் வகையில் இலை தழைகளை கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்திற்கு மேல் சென்று தீயணைக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.