கே.வி.குப்பம், டிச.30: கே.வி.குப்பம் துணை தாசில்தாரை தாக்கிய வழக்கில் இருவர் குண்டாசில் கைது செய்யப்பட்டனர். கே.வி.குப்பம் அடுத்த காமராஜபுரத்தில் துணை தாசில்தார் பலராமன் உள்ளிட்ட வருவாய் துறையினர் கடந்த 3ம் தேதி வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு ஒதுக்கிய நிலம் குறித்த ஆய்வு செய்ய சென்றனர். அப்போது, திருமணியை சேர்ந்த அல்லிபாபு(45), அவரது மகன் மனோஜ்(21), அவரது சகோதரர் மன்னார்(38) ஆகியோர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அல்லிபாபு துணை தாசில்தார் பலராமனை கற்களால் தாக்கியும், ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.