மோகனூரில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்

மோகனூர் பேரூராட்சியில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம், கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது. ஆர்டிஓ மஞ்சுளா வரவேற்றார். ராஜேஷ்குமார் எம்பி, ராமலிங்கம் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் மோகனூர் தாசில்தார் தங்கராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி, கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் உடையவர், இலக்கிய அணி அர்ஜூனன், மோகனூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் நவலடி, பேரூர் பொறுப்பாளர் குமரவேலு, பொறுப்பு குழு தலைவர் சரவணகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பிஆர்ஓ அரசு நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவற்றை பயிற்சி பெற்றவர்களை கொண்டு பாடவைக்க வேண்டும். பதிவு செய்யப்பட்டதை இசைக்ககூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில், விழாவின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, விழா முடிவில் தேசிய கீதம் ஆகியவற்றை பிஆர்ஓ சீனிவாசன் பாடினார். அவருடன் சேர்ந்து அமைச்சர், எம்பி, எம்எல்ஏ, அரசு அதிகாரிகள் பாடினர்.

Related Stories: