திருவில்லிபுத்தூர், டிச. 27: விருதுநகரில் உள்ள வனப்பாதுகாப்பு படை அதிகாரி மணிவண்ணன் உத்தரவின் பேரில், பாரஸ்டர் செந்தில் ராகவன் தலைமையில், அருப்புக்கோட்டை கல்குறிச்சி பதவியில் நேற்று அதிகாலை நேரத்தில் சோதனை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, தோணுகால் அருகே வந்த டூவீலரை நிறுத்தி சோதனை செய்த போது, தோணுகால் அருகே உள்ள வக்கனாங்குண்டைச் சேர்ந்த போஸ் (58) என்பவர் 10 காடை மற்றும் 3 முயல்களை வேட்டையாடி
கொண்டு வருவது தெரியவந்தது.