வருசநாடு, டிச. 27: வருசநாடு அருகே, மலைக்கிராமங்களுக்கு சாலை வசதியில்லாததால், போக்குவரத்துக்கு பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, தார்ச்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வருசநாடு அருகே, தும்மக்குண்டு ஊராட்சியில் காந்தி கிராமம், முத்துநகர் உள்ளிட்ட பல மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் போதிய சாலை வசதி இல்லாததால், பொதுமக்கள் போக்குவரத்திற்கு சிரமப்படுகின்றனர். மேலும், இப்பகுதியில் விளையும் தக்காளி, கத்தரி, அவரை, எலுமிச்சை, இலவம்பஞ்சு, கொட்டை முந்திரி உள்ளிட்ட விளைபொருட்களை தேனி, ஆண்டிபட்டி மதுரை ஆகிய நகரங்களில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்ல சிரமப்படுகின்றனர்.