காரைக்குடி, டிச. 27: காரைக்குடி அருகே புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்எஸ் மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ரத்தான விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்விக்குழு தலைவர் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுவாமிநாதன், அழகப்பா பல்கலைக்கழக என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் ஆகியோர் வழிகாட்டுதலின்படி முகாம் நடத்தப்பட்டது. கல்லூரி துணைமுதல்வர் லட்சுமி வரவேற்றார். வித்யாகிரி மெட்ரிக் பள்ளி முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன் முகாமை துவக்கி வைத்தார்.