ஒட்டன்சத்திரம், டிச. 24: ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் மோகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணைச்செயலாளர் ராஜாமணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்குவது, தொகுதியில் 30 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, பேராசிரியர் அன்பழகன நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது, தொகுதியில் 5 லட்சம் மரக்கன்றுகள் நட தீர்மானிக்கப்பட்டு 2 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. நடைபெற உள்ள நகர்ப்புற தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைத்து பட்டியலே விரைந்து தலைமைக்கு அனுப்புவது தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது, 200க்கும் மேற்பட்ட கிராம சாலைகளை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைத்தது, ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு குப்பை உரக்கிடங்கு அமைப்பதற்கு 20 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ததற்கு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.