முத்துப்பேட்டை அருகே பரபரப்பு டூவீலரில் வந்த பெண்ணை கத்தியால் குத்தி தன் கையையும் கிழித்த வாலிபர்

முத்துப்பேட்டை,டிச.23: முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மனைவி புவனேஸ்வரி(35). இவர் கரையாங்காடு அரசு பள்ளியில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இந்தநிலையில் புவனேஸ்வரி நேற்று மாலை அலுவல் காரணமாக முத்துப்பேட்டைக்கு வந்துவிட்டு டூவீலரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை பைக்கில் பின்தொடர்ந்து வந்த ஜாம்புவானோடை மேலக்காடு பகுதியை சேர்ந்த முனியப்பன் மகன் மதிவாணன்(36) என்பவர் கோபாலசமுத்திரம் - தில்லைவிளாகம் சாலையில் உள்ள விநாயகர் கோயிலிருகே புவனேஸ்வரியின் டூவீலர் மீது மோதி கீழே தள்ளிவிட்டு அவரை கழுத்து வயிறு ஆகிய பகுதியில் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தானும் கையில் கிழித்துக்கொண்டு ஓடியுள்ளார். அப்போது பொதுமக்கள் ரத்தகாயத்துடன் ஓடிய வாலிபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ரத்த வௌ்ளத்தில் கிடந்த புவனேஸ்வரியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக இருவரும் திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த முத்துப்பேட்டை போலீசார் எதற்காக பெண்ணை கத்தியால் குத்தினார்? என்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கத்தியால் குத்தப்பட்ட புவனேஸ்வரிக்கு 11வயதில் ஹரி என்ற மகன் உள்ளார். பட்டபகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

Related Stories: