புதுகை வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

புதுக்கோட்டை, டிச. 22: புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செய்ற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி முன்னிலை வகித்து பேசினார். மேலும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் பொதுச்செயலாளர் பேராசிரியர் அண்பழகன் நூறாவது பிறந்த நாளை கொண்டாடுவது. வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும். திமுக இளைஞரணி செயலாளர் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் எம்எல்ஏ டாக்கடர் முத்துராஜா, நகர செயலாளர் நைனாமுகது, முன்னாள் எம்எல்ஏ கவிதைபித்தன், மாவட்ட பொருளார் செந்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், நகர, பேரூர் கழக செயலாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: