கட்டிடத் தொழிலாளி போக்சோவில் கைது

பவானி,டிச.20: சித்தோடு அருகேயுள்ள ராயர்பாளையத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் கோபி(26).கட்டிடத் தொழிலாளியான இவர், 18 வயது நிரம்பாத சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார்.  இதனால், அதிர்ச்சியடைந்த அச்சிறுமியின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த மகளிர் போலீசார், கோபியைக் கைது செய்தனர்.

Related Stories: