திண்டுக்கல், டிச. 18: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பெத்தானியா தெருவைச் சேர்ந்த போஸ்துரை மகள் சிபியா (27). திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்த இன்பராஜ் மகன் அருண்குமார், வெளிநாட்டில் வேலை செய்வதாக, கடந்த 5 வருடங்களுக்கு முன், என்னை திருமணம் செய்தார். அதன்பின் 3 மாதம் சென்னையில் வசித்தோம். அப்போது வெளிநாட்டில் வேலை செய்யாமல் என்னை ஏமாற்றி திருமணம் செய்தது தெரிய வந்தது. மேலும், கணவர் மதுவுக்கு அடிமையானார். இதையடுத்து கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த 4 ஆண்டுகளாக பெற்றோருடன் வசித்து வருகிறேன். கடந்த நவ.26ந் தேதி எங்கள் வீட்டிற்கு வந்த அருண்குமார், தன்னோடு வாழ வேண்டும் என்று கூறி குடிபோதையில் விஷம் குடித்ததாக தற்கொலை மிரட்டல் விடுத்தார்.