கந்தர்வகோட்டை, டிச.18: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் மட்டங்கால் கிராமத்தில் உள்ள பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் மட்டங்கால் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மைய எண் 26 மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இதில் பயிலும் குழந்தைகள் அனைவரும் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்.