தூத்துக்குடி, டிச. 15: தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகள் மூலம் கடன் உதவி வழங்கும் திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சி காணொலி வாயிலாக தூத்துக்குடி மாநகராட்சி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு கடனுதவி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் எம்எல்ஏக்கள் மார்க்கண்டேயன், சண்முகையா முன்னிலையில் நடந்தது.