சிவகாசி, டிச.14: சிவகாசி சிவன் கோயிலில் கார்த்திகை கடைசி சோமவாரத்தை முன்னிட்டு நேற்று 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. கார்த்திகை சோமவாரங்களில் சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் செய்தால் நற்பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனடிப்படையில், சிவகாசி சிவன் கோயிலில் கார்த்திகை மாத கடைசி சோமவாரமான நேற்று சிவனுக்கு 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி கோயில் மண்டபத்தில் 1,008 வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டன.