விருதுநகர், டிச. 14: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பாவாலி கிராம விவசாயிகள் சார்பில் வடிவேல் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பாவாலி கிராம கண்மாயின் இரண்டு மடைகளும் இடிந்த நிலையில் உள்ளது. இதனால், மழை பெய்தும் கண்மாய் நிறையாமல் உள்ளது. இரண்டு மடைகளை இடித்து புதிதாக கட்ட வேண்டும். கலுங்கில் இருந்து பாவாலி பாலம் வரை கரைகளை பலப்படுத்த வேண்டும். 30 ஆண்டுகளாக கரைகளை பலப்படுத்த கூறி உரிய நடவடிக்கை இல்லை. கலுங்கில் நீர் வரத்து கால்வாய் சீனியாபுரம் பொதுப்பணித்துறை கண்மாய் ஷட்டர் வரை கால்வாயை ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்த வேண்டும்.