அறந்தாங்கி, டிச.11: குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட விபத்தில் பலியான ராணுவவீரர்களுக்கு அறந்தாங்கி வர்த்தக சங்கத்தினர் அஞ்சலி செலுத்தி மவுன ஊர்வலம் நடத்தினர். குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத், அவரது மனைவி உள்பட 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத் உள்ளிட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அறந்தாங்கி வர்த்தக சங்கத்தின் சார்பில் அறந்தாங்கி அம்மா உணவகம் அருகே நடைபெற்றது.