மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக்கலைக் கூடத்தில் அயர்லாந்து நாட்டில் உள்ள இந்திய ஸ்கல்ப்ச்சர் பூங்காவில் அமைப்பதற்காக, 15 டன் எடையில் ஒரே கல்லில் ஏழரை அடி உயரம், 10 அடி நீளம் கொண்ட ராட்சத சாணி வண்டு செதுக்கப்படுகிறது. இந்த, வண்டு எகிப்து நாட்டினர் பலர் கடவுளாக நினைத்து தங்கள் கழுத்தில் டாலராக அணிந்துள்ளனர். இந்த வண்டு, எந்தவொரு பூச்சிகளின் உதவியின்றி சாணியை உருட்டி சென்று, மழை காலங்களில் வெளியே வராமல், அதனை பாதுகாத்து வைத்து சாப்பிடும். கல்லினால் வடிவமைக்கப்பட்டுள்ள வண்டு உடலில் உள்ள சாணி உருண்டையின் மீது பல்வேறு நாடுகளில் வாழ்ந்து மறைந்த தத்துவ ஞானிகளின், மருத்துவ முன்னோடிகளின் பெயர்கள் செதுக்கப்பட்டுள்ளன.