கறிக்கடையில் செல்போன் திருட்டு

திருப்பூர், டிச. 9: திருப்பூர் தென்னம்பாளையம் அடுத்துள்ள தந்தை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (30). இவர் சந்தை கடை பகுதியில் கறிக்கடை வைத்துள்ளார். நேற்று கறி வாங்குவது போல் ஒருவர் கறிக்கடைக்கு வந்துள்ளார். பின்னர் ஈஸ்வரினிடம் 8 கிலோ கறி வேண்டுமென கேட்டுள்ளார். ஈஸ்வரன் கறி வெட்டிக்கொண்டிருந்தபோது அங்கிருந்த அவருடைய செல்போனை திருடி சென்றுள்ளார். இது குறித்து ஈஸ்வரன் தெற்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: